உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வாரணாசி பகுதியில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் தாகத்துடன் சுற்றித்திரிந்த நாய் ஒன்றின் தாகம் தீர்க்க உதவியுள்ளார். அந்த பகுதியில் இருந்த கைபம்ப் ஒன்றை பயன்படுத்தி தண்ணீர் இறைத்து நாயின் தாகம் தீர்த்துள்ளார் அவர்.
அந்த காட்சி புகைப்படமாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தை ஷாம்லி நகர போலீஸ் எஸ்.பி சுகிர்தி மாதவ் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
If a man loves dogs, he is a good man.
If dogs love a man, he is a good man.!Incredible Banaras..! pic.twitter.com/Wu4e6KVxdd
— Sukirti Madhav Mishra (@SukirtiMadhav) May 7, 2021
“ஒருவர் நாய்களை நேசிக்கிறார் என்றால் அவர் ஒரு நல்ல மனிதர். அதுவே நாய்கள் ஒரு மனிதனை நேசித்தால் அவரும் நல்ல மனிதரே!” என கேப்ஷன் கொடுத்துள்ளார் அவர்.