கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெட் கிடைக்காததால் தனது சகோதரரை இழந்துள்ளார் நடிகை பியா பஜ்பை.

உத்தரப்பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கை வசதிகள் கிடைக்காமல் பல நோயாளிகள் இறந்து போவதும், நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்டு அபயக்குரல் விடுக்கும் காட்சிகளும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் பிரபல நடிகை பியா பஜ்பையின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை பியா பஜ்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ”என் சகோதரர் இறந்து கொண்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் ஒரு படுக்கையும் வென்டிலேட்டர் உதவியும் தேவை. நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிற ஃபருகாபாத் நகரத்தில் காயம்கன்ஜ் பிளாக்கில் வசித்து வருகிறோம். நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். யாராவது உதவி செய்யுங்களேன் ப்ளீஸ்’’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

image

அவரின் ட்வீட்டை பார்த்த அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் கூடுதல் விபரம் தெரிவிக்குமாறு கேட்டார்கள். சிலர் ‘பெட்’ எங்கு கிடைக்கும் என்ற தகவலையும் கூறினார்கள். இந்நிலையில் ஒரு  மணிநேரம் கழித்து தன் சகோதரர் இறந்துவிட்டதாக ட்வீட் போட்டார் பியா. அதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரசிகர்கள், சக நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பியாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.