100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “10 நாட்களுக்கு முன்பு 100 பேரை பரிசோதித்தால் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால் தற்போது 100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வருகிறது. தியாகராய நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கத்தில் கொரோனா பரவல் தீவிரம் அதிகரித்துள்ளது. பொது இடங்களில் கொரோனாவுக்கான ரேண்டம் பரிசோதனையை அதிகரித்துள்ளோம்.” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.