ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. அவர், இன்று ஒலிம்பிக் தகுதிச் சுற்றுவரை வருவதற்கு நடிகர் சசிகுமாரின் உதவியும் ஊக்கமும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.
டோக்கியோவில் வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சு பிரிவில் கலந்துகொள்ள பவானி தேவி தேர்வாகியுள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
8 முறை தேசிய சாம்பியனான பவானிதேவிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்டப் பலர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பவானி தேவி ஒலிம்பிக் வரை தகுதி பெற்றதற்கு ஊக்கமாய் இருந்துள்ளார் நடிகர் சசிகுமார். 6 வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் நடந்த வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்தபோது நடிகர் சரிகுமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். அப்போது, ஒரு ஆட்டோவில் தன் அம்மாவுடன் வந்து சசிகுமாருக்கு நன்றி சொல்லி சென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பவானி தேவிக்கு எனது வாழ்த்துகள் ?
Feel #Proud n #Happy @IamBhavaniDevi ????#TokyoOlympics ? https://t.co/N2kyvNqzWn— M.Sasikumar (@SasikumarDir) March 16, 2021
” இந்தத் தகவலை ’கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணன் தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மீண்டும் சசிக்குமார் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுள்ள பவானி தேவிக்கு வாழ்த்துகள் சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார்.