மேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் பாஜக அவருக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது.

image

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டைக்கறி கிடைக்கும் என்றும் ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சுய உதவிக்குழுக்களால் மதியம் 1 முதல் 3 மணி வரை இந்த உணவுக்கூடம் இயங்குவுள்ளதாகவும் படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.