திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி செய்கிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வேலூரில் பேசும்போது, ”அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். டிடிவி தினகரன் 10 ஆண்டுகள் கட்சியில் கிடையாது, ஜெயலலிதா அவரை நீக்கியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்படுத்த டிடிவி தினகரன் முயற்சி செய்தார்.
நம்பிச் சென்ற 18 எம்எல்ஏக்களை தினகரன் நடுரோட்டில் விட்டுச் சென்றார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் சதி திட்டம் தீட்டுகின்றனர். சிலரது சதி திட்டத்தை முறியடிப்போம். சதிவலையை தூள்தூளாக உடைப்போம்” என்று சசிகலா மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்”.
<iframe width=”716″ height=”403″ src=”https://www.youtube.com/embed/tTsp1uf0P-4″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>