சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறது படக்குழு.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா, விதார்த், ரவீனா நடிப்பில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. மனித உயிர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. பலராலும் பாரட்டப்பெற்றது..

image

இப்படத்தைத் தொடர்ந்து சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார்.

image

இந்நிலையில், காமெடி நடிகர் செந்திலை தனது அடுத்தப் அப்டத்தில் ஹீரோவாக்கி இருக்கிறார், சுரேஷ் சங்கையா. ’சத்திய சோதனை’ படத்தை தயாரித்த சமீரா பரத்ராம்தான் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார். சமீ[பத்தில் இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார், அதன் தயாரிப்பாளார். இந்நிலையில், தற்போது படப்பிடிப்புகள் தொடங்கியுள்ள நிலையில் படங்கள் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.