இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி 5 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அண்மையில் இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலிலும் இங்கிலாந்து அணி விளையாடி இருந்தது. இலங்கையில் நடைபெற்ற இந்த தொடரில் 2 – 0 என இங்கிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது. இந்நிலையில் இந்தத் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின்போது இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷான் டிக்வெல்லா, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லியிடம் “இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளைடுவாயா?” எனக் கேட்டிருந்தார். அதற்கு சிப்லியும் கூலாக பதில் சொல்லியுள்ளார். அவர் சொன்ன பதில் என்ன?


“தெரியல பாஸ். எனக்கு இந்த தொடர் நல்லதாக அமையவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது. அவரது யதார்த்தமான பதில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக இந்தத் தொடரில் நான்கு இன்னிங்ஸ் விளையாடியுள்ள சிப்லி 62 ரன்களை எடுத்துள்ளார். அதில் கடைசி இன்னிங்ஸில் 56 ரன்களை குவித்திருந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சிப்லியும் உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.