`ஜல்லிக்கட்டு நாயகன்’ – முதல்வர் புகழாரம்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அகியோர் தொடங்கிவைத்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்றால் அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது பாரம்பர்யத்தை, கலாசாரத்தைக் காக்கக்கூடிய இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை அ.தி.மு.க அரசுதான் நிலை நிறுத்தியது. காளைகளை அடக்க வந்திருக்கும் இளைஞர்களுக்கும், காளைகளை வளர்த்த விவசாயிகளுக்கும் வாழ்த்துகள்” என்றார். முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிடுகையில் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ எனக் குறிப்பிட்டார்.