நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம் நேற்று நடைபெற்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’பொறியாளன்’ படத்தின் மூலம் அறிமுகமானார், ஆனந்தி. பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் புகழ் பெற்றதால் கயல் ஆனந்தி என்று அழைக்கபடுகிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா,  ’சண்டிவீரன்’, ’விசாரண’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

 image

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ‘ஜோ’வாக கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில், திடீரென சாக்ரடீஸ் என்பவருடன் நேற்று திடீர் திருமணம் நடைபெற்றது. இதில், இயக்குநர் நவீன், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிடோர் கலந்துகொண்டார்கள். ஆனந்தி திருமணம் செய்துகொண்ட சாக்ரடீஸ் ’மூடர் கூடம்’ இயக்குநர் நவீனின் மனைவி சிந்துவின் தம்பி ஆவார். நவீன் இயக்கிவரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னிச் சிறகுகள்’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். ’அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் ஆனந்தி நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டடு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.