ஜன.14-ஆம் தேதி சென்னை வரவிருந்த அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டுவிழாவில் பங்கேற்க ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருவதாக இருந்தார். அதேபோல் சென்னை வருகையின்போது, அதிமுகவின் கூட்டணி குறித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, ஏற்கெனவே கூறியபடி சென்னையில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.