நடிகர் ரஜினியின் கட்சி அறிவிப்பு மதுரையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் கட்சி எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிர கட்சி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பூத் கமிட்டி உறுப்பினர்களையும் மக்கள் மன்ற நிர்வாகத்தினர் நியமனம் செய்து வருகின்றனர். ஒரு பூத் கமிட்டிக்கு குறைந்த பட்சம் 15 பேரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கைக்கு பணம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், நிர்வாகிகளின் செயல்பாட்டில் ரஜினி அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மக்கள் மன்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனத்தில் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாட்டில் ரஜினி திருப்தியாக இருப்பதாகவும் சிக்கல்கள் ஏதும் இல்லையெனவும் தகவல் வெளியானது.

image

இந்நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகள் மதுரையில் கடந்த 2 நாட்களாக மதுரையில் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரஜினியின் கட்சி அறிவிப்பு பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கும் இடம் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான இடம் என்றும் அதன் உரிமையாளர் ரஜினிக்கு மிக நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

<iframe width=”640″ height=”360″ src=”https://www.youtube.com/embed/cnCTUBt6PM8″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.