சூபியும் சுஜாதாவும் பட இயக்குநர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா சூழலில் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல படங்கள் ஓடிடியில்தான் வெளியாகின. தமிழில் ’பொன்மகள் வந்தாள்’ முதல் ஓடிடி படமாக வெளியானது. அதேபோல, மலையாளத்தில் இந்த ஆண்டு ஓடிடியில் வெளியான படம் ’சூபியும் சுஜாதாவும்’. இப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார் இயக்குநர் ஷாநவாஸ். வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியாக நடித்த அதிதி ராவுக்கும் சூபியாக நடித்த தேவ் மோகனுக்கும் இடையேயான காதலை குறித்து பேசிய இப்படம் கலவையான விமர்சங்னங்களை பெற்றது.

image

இந்நிலையில், இப்படத்தை இயக்கிய ஷாநவாஸ் தனது அடுத்தப் படத்தின் கதைக்காக கோவை அருகேயுள்ள அட்டப்பாடியில் இருந்துள்ளார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கோவை மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதால் உறுதியான செய்தி வெளியாகும்.

இதனால், மலையாள திரைத்துறையினர் சோகத்தில் இருக்கிறார். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கிய ’Karie’ திரைப்படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.