செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 9300 கன அடியில் இருந்து 5,016 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் சரசரவென அதிகரித்தது. 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கிய நிலையில், நேற்று மதியம் விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு நேற்று இரவு 9 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் நீர் வரத்து உயர்ந்ததால் ஏரியில் மொத்தம் 19 மதகுகள் உள்ள நிலையில், 7 மதகுகள் வழியாக 9 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர் திறப்பு 5016 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.