தெற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாமல்லப்புரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே கரையைக் கடக்கிறது என்பதால், வங்கக்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள நிவாரண பணிகளுக்காகவே 5 மீட்புக்குழுக்களை அமைத்துள்ளது அரசு.
அதேபோல, வெள்ள நிலைமைக்கு ஏற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>போ புயலே<br>போய்விடு<br><br>பச்சைமரம் பெயர்த்துப்<br>பல் துலக்காமல்<br><br>வேய்ந்தவை பிரித்து<br>விசிறிக் கொள்ளாமல்<br><br>குழந்தையர் கவர்ந்து<br>கோலியாடாமல்<br><br>பாமர உடல்களைப்<br>பட்டம் விடாமல்<br><br>சுகமாய்க் கடந்துவிடு<br>சுவாசமாகி விடு<br><br>ஏழையரின்<br>பெருமூச்சை விடவா நீ<br>பெருவீச்சு வீசுவாய்?<a href=”https://twitter.com/hashtag/NivarCyclone?src=hash&ref_src=twsrc%5Etfw”>#NivarCyclone</a> <a href=”https://twitter.com/hashtag/Nivar?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Nivar</a></p>— வைரமுத்து (@Vairamuthu) <a href=”https://twitter.com/Vairamuthu/status/1331449562431512582?ref_src=twsrc%5Etfw”>November 25, 2020</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்
“போ புயலே போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல்,
வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல்
பாமர உடல்களைப் பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு
ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.