மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தருமாறு கட்டாயப்படுத்த முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம். மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை. 7.5% இடஒதுக்கீடு வந்தால்தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் ” என தெரிவித்தார்.
முன்னதாக ஆளுநர் திமுக தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நேற்று பதிலளித்திருந்தார். அதில் மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவைப்படுவதாக கூறினார்.