ஐந்து இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியான ‘புத்தம் புது காலை’ ஆகக் கொடுமை என நடிகர் நட்டி விமர்சித்துள்ளார். கடந்த வாரம் அமேசான் பிரைமில் ‘புத்தம் புது காலை’ எனும் Anthology திரைப்படம் வெளியானது.
கொரோனா ஊரடங்கை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தைக் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சுஹாசினி என ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
புத்தம் புது காலை… ஆக கொடுமை….வாழ்த்துக்கள்….தாங்க முடியலடா சாமி…
— N.Nataraja Subramani (@natty_nataraj) October 17, 2020
இப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி, இந்தப் படம் ஆகக் கொடுமை, தாங்க முடியலடா சாமி எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.