திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிருபானந்தன்  என்பவர் திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.

 image

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தனர்.

 இம்மனு குறித்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை 16 ம் தேதி ஒத்தி வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.