கப்பலில் உள்ள ஓட்டையை அடைக்க முற்படுவதற்குள் மற்றொரு ஓட்டை விழுவதாக வேதனை தெரிவித்துள்ளார் தோனி.
 
நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 170 ரன்களை சேஸ் செய்ய முற்பட்டு, 132 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சியளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. விளையாடிய 7 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
 
image
 
இந்நிலையில் நேற்றையப் போட்டியின் தோல்விக்குப் பின் தோனி கூறுகையில், ‘’ பந்துவீச்சில் எதிரணியை நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஆனால், கடைசி 4 ஓவர்களில்தான் நாங்கள் தவறு செய்துவிட்டோம். அந்த 4 ஓவர்களில் நாங்கள் இன்னும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசியிருக்க வேண்டும்.
 
பேட்டிங்கை பொருத்தவரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது. இன்று வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அதைச் சரிசெய்ய ஏதாவது செய்வது அவசியம். எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. பேட்டிங்கில் மிகப்பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும்.
 
image
 
இந்தப் போட்டியில் 6-வது ஓவரிலிருந்து பேட்டிங்கில் சக்தி இழந்துவிட்டதாகவே நினைக்கிறேன். நான் வீரர்களிடம் அடிக்கடி கூறுவது ஒன்றுதான். கடந்த போட்டியின் முடிவைப் பற்றி நினைத்தால் உங்களுக்கு சுமைதான் அதிகரிக்கும். தற்போது நடப்பில் உள்ள போட்டியின் மீதும், அதை எவ்வாறு வெற்றியாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துங்கள் என்றுதான் கூறுவேன்” என்றார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.