கொரோனோ பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை ஆனையூரில் மாணவர்கள் மரக்காலில் 10 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

image

கொரோனோ பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொரோனோ பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், துரை மாவட்டம் ஆனையூரில் வி.கே.எஸ் சிலம்பம் சங்கம் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகம் சார்பாக சிலம்பாட்ட வீரர்கள் தொடர்ந்து 10 மணிநேரம் மரக்காலில் நின்று நடனமாடியும் ஒற்றைக்கையில் சிலம்பம் சுற்றியும் கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

image

 இதைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒற்றைக்கையில் சிலம்பம் சுற்றியதும் மரக்காலில் 10 மணிநேரம் தொடர்ந்து நடனமாடியதும் பார்த்தவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. மாணவ மாணவிகளின் இந்த சாதனை முயற்சியை பொதுமக்கள் பாராட்டினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.