கொடைக்கானல் வாரச்சந்தையில் கூடார உள்கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்த நகராட்சியை எதிர்த்து, சாலையோர கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். 

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆறுமாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வாரச்சந்தையில், கூடாரத்தினுள் அமைக்கப்படும் உள் கடைகள் மட்டும் வியாபாரம் செய்ய கொடைக்கானல் நகராட்சி அனுமதி அளித்திருந்தது. 

image

இன்று வாரச்சந்தைக்கு வியாபாரம் செய்ய வந்த வத்தலக்குண்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியல் செய்ய முயன்றனர்.

image

 இந்நிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி நிர்வாகம் பின்னர், அவர்களையும் சாலை ஓரத்தில் சமூக இடைவெளி விட்டு கடைகள் அமைக்க அனுமதியளித்தது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.