திருத்துறைப்பூண்டியில் கொரனோவால் உயிரிழந்ததாக கூறி இறந்த தந்தையின் உடலை கொடுக்க மறுத்ததால், மகன் மருத்துவமணையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலகொருக்கை பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் வயது (47 ). விவசாய வேலை செய்துவரும் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அவர் இறந்து விட்டார். அமிர்தலிங்கத்தின் மகன் பிரபு (20) மருத்துவமனையில் தந்தையின் உடலை கேட்டபோது கொரோனா இருப்பதாக கூறி உடலை தர மறுத்து விட்டனர். .இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு மருத்துவமனையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தந்தையின் உடலை கொடுக்க மறுத்த காரணத்தால் அதிர்ச்சியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.