கோவை மேட்டுப்பாளையம் தனியார் விடுதியில் கண்ணாடிக்கு பின்புறம் அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்த வழக்கில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சரண்யா என்பவருக்குச் சொந்தமான தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று பூட்டிக்கிடந்த விடுதியை திறந்து காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியானது சுவரில் வைக்கப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் கண்ணாடியை தள்ளிய போது, கண்ணாடி கதவு போல திறந்துள்ளது. கண்ணாடிக் கதவின் பின்னே மெத்தை மற்றும் கட்டிலுடன் 22 வயது பெண்மணி ஒருவர் இருந்துள்ளார்.

image

உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் அப்பெண்ணை அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கடந்த நான்கு வருடங்களாக விடுதியை நடத்தி வந்த மகேந்திரன் (46) என்பவரையும், விடுதியில் உதவியாளாரக இருந்த கணேசன்(36) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் விடுதிக்கும் போலீஸார் சீல் வைத்தனர்.

இது குறித்து ஆங்கில இணையதளமான நியூஸ் மினிட் தளத்திற்கு காவல் அதிகாரி ஒருவர் கூறியபோது “ மீட்கப்பட்ட பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக விடுதி இயங்காமல் இருந்தது.” என்றார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.