பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் வழக்கில் மேலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. நடைமுறைகளை மீறி, சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்திக்கு மட்டும் சடலத்தைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், குடும்ப உறுப்பினர்கள் போலீஸ் உதவியின்றி சென்றதாகக் கூறி அனுமதிக்கவில்லை எனவும் சவக்கிடங்கு அதிகாரி கூறியுள்ளார்.
“டைம்ஸ் நவ்” ஊடகம் மும்பையில் இருக்கும் கூப்பர் மருத்துவமனையின் சவக்கிடங்கு அதிகாரியிடம் பேசியபோது அவர் தெளிவான தகவல்களைக் கொடுத்துள்ளார். விதிப்படி, சொந்த குடும்பத்தினரால்கூட சவக்கிடங்கிற்குள் நுழையமுடியாது. ஆனால் ரியா சவக்கிடங்கிற்குள் குறைந்தது 45 நிமிடங்கள் இருந்தார் எனக் கூறியிருக்கிறார்.
சட்டத்திற்கு புறம்பாக ரியா சவக்கிடங்கில் எப்படி இருக்க முடிந்தது என சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சுஷாந்தின் சொந்த சகோதரி இருந்தபோது ஏன் ரியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து மும்பை காவல்துறையினர் நிறைய விளக்கங்களை கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
சுஷாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டுசென்றபோது, அவருடைய சகோதரி வீட்டில் கலகத்துடன் இருந்திருக்கிறார். அப்படி ஏதாவது செய்யப்பட வேண்டியிருந்தால் அவர் அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும் ஜூன் 8 வரை ரியா அவர் வீட்டில்தான் இருந்திருக்கிறார். அன்றுதான் வீட்டைவிட்டு சென்றிருக்கிறார். சுஷாந்தின் இரண்டு லாக்கர்களும் காலியாக இருந்தது. சவக்கிடங்கில் அவருக்கு என்ன உரிமை இருந்தது என்பது போன்ற பல கேள்விகளுக்கு முன்பை காவல்துறையினர் நிறைய விளக்கங்களைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று விகாஸ் சிங் கூறியிருக்கிறார்.