பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலையில் முன்னேற்றம்.

image
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீண்டும் நல்ல உடல் நலத்தோடு திரும்பி வருவேண்டும் என்று அவரது ரசிகர்களும், இளையராஜா, கமலஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமும் சில சமயம் கவலைக்கிடமாகவும் இருந்து வருகிறது. நினைவாற்றல் இன்றி இருந்த அவர், இப்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலை கேட்டு செயல்படும் அளவு அவரது நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன

மேலும் அவரது நுரையீரல் மட்டும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், ஆனால் அவரது மற்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக தெரியவருகிறது. நுரையீரலின் பணியை செய்யும் “எக்மோ” கருவி மூலமே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.