வெளியானது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்வுகள் ரத்தான நிலையில் பள்ளி அளவில் நடைபெற்ற காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வு முடிவுகள் அடிப்படையில் மாணவ மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் கணக்கிடப்பட்டு அந்த விவரங்கள் இன்று காலை வெளியிடப்பட்டது.

தேர்வு

பள்ளி மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், www.tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் மாணவர்கள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.