நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நாள்தோறும் புதுப்புது திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், சுஷாந்த் சிங் பயன்படுத்திய சிம் கார்டுகள் எதுவும் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவற்றில் ஒன்று அவரது நண்பரான நடிகர் சித்தார்த் பிதானியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சுஷாந்த் சிங்கின் அழைப்பு விவர பதிவுகளை கண்காணித்து வருவதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.