பத்து நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு இருக்கும் என்று வெளியான தகவல் குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது
தஞ்சாவூரில் 10 நாட்களுக்கு மின்வெட்டு இருக்குமென சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. வாட்ஸ் அப் குரூப்களில் வேகமாக பரவி வரும் இந்த செய்தியால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், பத்து நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு இருக்கும் என்று வெளியான தகவலில் உண்மையில்லை வரும் ஜூலை.28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே பராமரிப்பு காரணமாக மின்வெட்டு இருக்கும் என தெரிவித்துள்ளனர்