பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அவரது கணவர் ரன்வீர் சிங் குறித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது 2.5 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது.
பாலிவுட்டின் ஹாட் ஜோடி என்றால் அது தீபிகாவும் ரன்வீரும் தான். இவர்களின் காதல் குறித்த செய்திகள் அப்போது பாலிவுட்டையே பரபரப்பாக பேச வைத்தது. அந்த வகையில் தற்போது கணவர் குறித்து தீபிகா பதிவிட்ட ஒரு பதிவு, இன்ஸ்டாகிராமை பற்ற வைத்திருக்கிறது.
கடந்த திங்கள் கிழமை ரன்வீருக்கு 35 வது பிறந்த நாள். கணவருக்கு வாழ்த்து தெரிவித்த தீபிகா படுகோனே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் ஒரு ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை பதிவிட்டு “ என் வாழ்கையின் வெளிச்சம். எனது உலகத்தின் மையம். உங்களுக்கு ஏராளமான ஆரோக்கியமும் மன அமைதியும் கிடைக்கட்டும். ஐ லவ் யூ” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது 2.5 லைக்குகளைக் கடந்து ஹிட் அடித்திருக்கிறது.