நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் ஏதோ நடந்திருப்பதாக அவரது அக்கா கணவரும் ஹரியானா மாநில காவல்துறை ஏடிஜிபியான ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

image

இந்நிலையில் சுஷாந்த் சிங் இறந்தபோது அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 8 ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் தனது குடியிருப்பின் 14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதால் இவை இரண்டிற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

இதற்குள்ளாக சுஷாந்த் சகோதரியின் கணவரான காவல்துறை ஏடிஜிபி ஓ.பி சிங் “அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, தீவிர விசாரணை வேண்டும்” என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருக்கு அடுத்தப்படியாக “சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும்” என்று ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.