தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த சில தினங்களாக நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று மட்டும் 1989 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இதில், மாவட்ட வாரியாக அதிகபட்சமாக சென்னையில் 1487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் – 1
செங்கல்பட்டு – 136
கடலூர் – 12
தருமபுரி – 2
திண்டுக்கல் – 9
கள்ளக்குறிச்சி – 11
காஞ்சிபுரம் – 22
கன்னியாகுமரி – 11
கரூர் – 5
மதுரை – 15
நாகை – 2
பெரம்பலூர் – 2
ராணிப்பேட்டை – 2
சிவகங்கை – 13
தென்காசி – 3
தஞ்சை – 10
திருவள்ளூர் – 78
திருவண்ணாமலை – 50
திருவாரூர் – 15
தூத்துக்குடி – 30
நெல்லை – 18
திருச்சி – 6
வேலூர் – 13
விழுப்புரம் – 13
விருதுநகர் – 2 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் இன்றைக்கு கொரோனா பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை.