பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல் ஏ பழனிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுக அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.