கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் உடலில் ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்தால், உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் யோசனை கூறுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் உடல் ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்தால், உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் யோசனை கூறுகின்றனர்.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு !
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கொள்ளளவில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே விரல்களில் மாட்டும் எஸ்.பி.ஓ. 2 என்ற கருவியைக் கொண்டு, உடலின் ஆக்ஸிஜன் அளவை கண்காணித்து, அந்த அளவு குறைந்தால் உடனடியாக சிகிச்சையளித்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.