ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022-ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் செல்ல இருந்தது.

image

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலம் விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அதேபோல இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்துவதாக இருந்த ‘சந்திரயான் 3’ திட்டமும் ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.