நடிகர் சிலம்பரசன் திருமணம் குறித்து அவரது பெற்றோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
நடிகர் சிலம்பரசனின் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி வெளிவந்தவாறே உள்ளது. இந்நிலையில் சிலம்பரசன் திருமணம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது பெற்றோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோ இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத் தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்குப் பொருத்தமான பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிகை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்
“நல்லா இருக்கிறீர்களா ?” – தமிழில் பேசி உதவிய நடிகர் சோனுவை பார்த்து நெகிழ்ந்த தமிழர்கள்