தனக்கு கொரோனா வைரஸ் சோதனையும் சிகிச்சையும் அளிக்க வேண்டி ட்விட்டரில் பதிவிட்ட நபருக்கு ஆறுதலோடு நடவடிக்கை எடுப்பதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

பாலா இந்தியா என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து “என் அப்பா கேரளா சென்று வந்தார். ஆகவே எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறது. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன். மருத்துவரிடம் சொன்னால் திட்டி அனுப்புகிறார்கள். வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவவும் எடப்பாடி ஐயா. இல்லையென்றால் தற்கொலை தான் முடிவு” எனத் தெரிவித்திருந்தார்.

உடனடியாக இதற்கு ட்விட்டரில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி “கவலை வேண்டாம் தம்பி” எனக் கூறி சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரை டேக் செய்து, அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த பீலா ராஜேஷ் “சம்பந்தப்பட்ட நபரிடம் பேசிவிட்டோம். அவர் கடலூரைச் சேர்ந்தவர். அவருக்கு கொரோனா பரிசோதனையும், சிகிச்சையும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.