நாளை முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால், அரசு பிற மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை தளர்த்தி வருகிறது. அதன் படி நாளை முதல் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் அரசு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. அவை பின்வருமாறு:

1. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்கலாம்.

2. ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்களை தினமும் 3 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

image

3.ஓட்டுநர்கள் மற்றும் அதில் பயணம் செய்பவர் கட்டாயாம் மாஸ்க் அணிய வேண்டும்.

4. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ சைக்கிள் ரிக்‌ஷா இயக்க அனுமதி இல்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.