வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

image

கொரோனா பரவல் காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது. சிறு குறு நிறுவனங்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி கட்டும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறுதொழில்களின் கடனுக்காக 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.