தமிழகத்தில் இதுவரை மாவட்ட ரீதியாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் 93 நபர்கள். மீதமுள்ளவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6278 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரைமாவட்ட வாரியாக கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கலாம்.