தமிழகத்தில் இன்று  939பேர்  கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.
 
Image
 
இதில் சென்னையில் மட்டும் இன்று 322 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 
 
image
 
இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்த 939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.