தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 43 நபர்களுக்கு, கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கடைசியாக, சிகிச்சையில் இருந்த ஐவரும், நேற்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், ரெட் மண்டலத்தில் இருந்த தேனி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது.
Also Read: `மருத்துவமனையில் இருந்த ஐவரும் வீடு திரும்பினர்!’ – ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய தேனி
பாசிட்டிவ் நபர்கள் இல்லாத மாவட்டங்களில் ஒன்றாக தேனி இருந்தது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் கொரோனா பாசிடிவ் நபர், கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தேனி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, “போடி அரசு மருத்துவமனை அருகே உள்ள சந்துப்பகுதியில் இட்லி கடை வைத்துள்ளார் அப்பெண். வயது 50. இதுவரை போடி நகரில், தொடர்பு மூலமாக மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், முதன்முறையாக, தொடர்பு தெரியாத ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்த 7 நபர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது இட்லி கடையில் தொடர்ச்சியாக யார் யாரெல்லாம் இட்லி வாங்கி சாப்பிடுவார்கள் என லிஸ்ட் தயார் செய்யும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை” என்றனர்.
Also Read: ஊரடங்கில் வனத்துக்குள் சென்று வேலம் மரப்பட்டையை எடுக்கும் `திடீர்’ கும்பல்! -தேனியில் அதிர்ச்சி
அரசு மருத்துவமனை அருகே உள்ளதால், மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.