மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் கொரானாவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து 250 பட்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணியாற்றும் பட்டரின் தாயாருக்கு கொரானா தோற்று உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நள்ளிரவு உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டியின் உடல் உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். இறந்தவரின் மகன் கோயில் பட்டர் என்பதால் அவருடன் பணியாற்றிவரும் சக பட்டர்கள் உட்பட மொத்தம் 250பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

image

மதுரையில் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  
இதேபோல், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 3 ம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

image

சாலையில் தானே கெடுபிடி: கடல் வழியாக 1000கிமீ பயணம் செய்த தொழிலாளர்கள்!

இவரது உறவினர் கொல்கத்தாவில் இருப்பதால் அவர்களை பார்த்து விட்டு மீண்டும் சென்னைக்கு வந்தவுடன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்தபோது அந்த பெண்மணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறந்து போன அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.