தமிழகத்தில் நேற்று, 3 வயது குழந்தை உட்பட மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் அனைத்து மண்டலங்களுக்கும் பரவியது நோய் தொற்று. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு
மகாராஷ்ராவில் அமைச்சர் உட்பட ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டாருக்கு கொரோனா. மும்பை தாராவியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214ஆக அதிகரிப்பு. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 ஆக உயர்வு
நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகம். அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
மே மாத்திற்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்.வரும் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என அறிவிப்பு.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவிகித ஊழியர்களுடன் இயங்கலாம்.100 நாள் வேலை திட்டத்திற்கும் அனுமதி அளித்தது தமிழக அரசு.
கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் ஊரடங்கு.வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம். தற்போதைய அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு
அமெரிக்காவில் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரிப்பு