கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் சானிடைஸர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிலும் ஆல்கஹால் கலந்த கை சுத்திகரிப்புத் திரவம் மிகவும் அவசியமானது. கொரோனா வைரஸ் தொடர்பான முதல் செய்தி வந்ததிலிருந்தே இவ்வகை சானிடைஸர்களுக்கு நாடெங்கும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த நிலையில் இதைச் சரிக்கட்ட, அரிசியின் மூலம் சானிடைஸர்கள் தயாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்திலிருந்து கிடைக்கும் உபரி அரிசியை இதற்காகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதன் மூலம் எத்தனால் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏழை மக்களுக்கு உணவில்லாத இந்தத் தருணத்தில் அரிசியை சானிடைஸர் தயாரிப்புக்கு ஏற்றுமதி செய்வது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் சமூக வலைதளங்களில் கிடைத்த முடிவுகள் இதோ…
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களை வைத்து நமக்குக் கிடைத்த இறுதி முடிவுகள்
இது குறித்து வேறு ஏதேனும் கருத்துகள் இருப்பின் கீழே கமென்டில் பதிவு செய்யவும்.