மருத்துவர்களை காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

image

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை – புதுச்சேரி முதல்வர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதுமான அடிப்படை வசதியில்லை, உணவு‌ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியதாக வெளியான செய்தி கொரோனாவை விட கொடூரமானது எனக் கூறியுள்ளார். மேலும் சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத தமிழக அரசு, மக்களை எப்படி காப்பாற்றும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பூம்புகார்: அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த காகங்கள்… நடந்தது என்ன?

image

சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையில் இந்த நிலை என்றால், மற்ற மருத்துவமனைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை என்றும், தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது எனவும் ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.