தமிழக திரையரங்குகளின் உரிமங்களை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பல திரைகள் கொண்ட மல்டி பிளக்ஸ் மற்றும் ஒற்றை திரையரங்குகள் என சுமார் ஆயிரம் திரையரங்குகள் உள்ளன. மக்களின் பொழுதுபோக்கு
மையங்களாக திகழ்ந்த இத்திரையரங்குகள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்பட
வேண்டிய தேவை உள்ள சூழலில், தற்போது திரையரங்குகளின் உரிமையாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இனி உரிமங்களை புதுப்பிக்க வேண்டுமெனில், பொதுப்பணித்துறை, மின்துறை, காப்பீட்டுத்துறை என பலதுறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் ஊரடங்கு நேரத்தில் இது எந்த
அளவு சாத்தியப்படும் என்ற கேள்வி அவர்களிடம் இருக்கிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்து திரையரங்குகளை திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால்
திரையரங்குகளின் உரிமங்களை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
6 குழந்தைகளுடன் மயானத்தில் குடியிருந்த பெண் – ஊரடங்கால் ஊர் திரும்பாத கணவன்..!
“3 நாட்களாக சாப்பிடவில்லை” – பசி தாங்கமுடியாமல் சென்னையில் போராடிய வடமாநிலத்தினர்..!
இது குறித்து திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் கூறும்போது “கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்து திரையரங்குகளை அதன் இயல்பு நிலையை அடைய சில மாதங்கள் பிடிக்கும்.
இதனால் திரையரங்குகளின் உரிமங்களை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்” என்றார்