தூத்துக்குடி அருகே பிரிந்து சென்ற மனைவி மற்றும் பிள்ளைகளை காண நடந்து சென்ற கணவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கமலாபுரத்தினை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சண்முகராஜ். இவர் சென்னையில் உள்ள ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முப்படாதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் வேலை பார்த்து வந்த சண்முராஜ்க்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது ஊரில் வசித்து வந்துள்ளார்.

image

அத்துடன் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு முப்படாதி தனது குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் தனிமையில் இருந்த சண்முகராஜ் இன்று அதிகாலை தனது ஊரில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க தென்காசிக்கு நடந்து செல்ல முடிவு செய்தார். டிபன் பாக்சில் உணவு வைத்து கொண்டு அவர் நடக்க தொடங்கியுள்ளார்.

image

கோவில்பட்டி சாத்தூர் சாலையில் சட்டை இல்லமால் டிபன் பாக்ஸ்வுடன் நடந்து சென்று கொண்டிருந்த சண்முகராஜை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொதுமக்கள் சண்முகராஜிடம் விசாரிக்க முயன்ற போது, பயந்து போய் அவர் வேகமாக ஓடி கீழே விழுந்துள்ளார். தகவல் கிடைத்தும் கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து சண்முகராஜிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சண்முகராஜ் பேச மறுத்து அமைதியாக இருந்தார்.

image

இதனைத் தொடர்ந்து அவர் வைத்து இருந்த செல்போன் மூலமாக அவரை பற்றி அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சண்முகராஜ் மனைவி மற்றும் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். பிரிந்த சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை காண 34 கிலோ மீட்டர் தூரம் சட்டையில்லமால் கணவர் நடந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கடையை திறந்து பான் மசாலா கொடுக்க முடியுமா? முடியாதா?’: கொலையில் முடிந்த போதைப்பழக்கம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.