தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்திருக்கும் மஞ்சளாறு அணையின் மலைப்பகுதியில் உள்ளது ராசிமலைக் காலனி என்கிற பழங்குடியினரின் குடியிருப்பு. சுமார் 30 குடும்பங்கள் வசிக்கும் இங்கு, அரசின் ரேஷன் பொருள்கள் மற்றும் 1000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: `பார்த்துப் பார்த்து வளர்த்தோம்; என்ன செய்யுறதுன்னே தெரியல..!’- கலங்கும் தேனி வாழை விவசாயிகள்
ராசிமலைக் காலனியைச் சேர்ந்த மருதையா, “ஊரடங்கு போட்டதிலிருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு. கூலி வேலை செஞ்சுதான் பிழைத்துவந்தோம். இப்போ அதுக்கும் வழி இல்லை. காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்கணும்னா, 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேவதானப்பட்டிக்குத்தான் போகணும். வாகன வசதி இல்லாததுனால நடந்து போய்த்தான் வாங்கிட்டு வரவேண்டிய சூழல். இதனால், அன்றாடத் தேவைகூட பூர்த்தியாவதில்லை. ரேஷன் பொருள்கள் வந்துருச்சு. அதை மட்டும் வச்சு என்ன செய்றது? வெறும் கஞ்சி காய்ச்சிதான் குடித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் வேதனையோடு.
Also Read: `ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்!’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்
தொடர்ந்து பேசிய சாந்தா, “ரேஷன் பொருள்கள் 15 நாளுக்குதான் வரும். எங்களுக்கு இப்போ வேலையும் இல்ல. கையில காசும் இல்லை. காசு இருந்தாகூட நடந்தே தேவதானப்பட்டி போய் பொருள்கள் வாங்கி வந்துருவோம். அதுக்கும் வழி இல்லை. இதுல, ஊரடங்கை இன்னும் 15 நாளுக்கு மேல அதிகப்படுத்தப் போறதா சொல்றாங்க… அப்படி செஞ்சா, நாங்க சாப்பாடு தண்ணீர் இல்லாம சாகவேண்டியதுதான். எங்களுக்குக் காய்கறி, மளிகை சாமான்கள் வேணும். அதை ஏற்பாடு செய்து கொடுங்க. கலெக்டருக்கு நாங்க வைக்கிற கோரிக்கை அதுதான். வேற எதுவும் எங்களுக்கு வேண்டாம்” என்றார்.
Also Read: `இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்!’ – புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்
ராசிமலை காலனி மக்கள் தங்கியிருந்த வீடுகள் சேதமடைந்து போனதால் மழைக்காலத்தில் மிகவும் சிரமத்தைச் சந்தித்தனர். அவர்களின் நிலையை விகடன் செய்தி வெளியிட்டது. அதை அடுத்து அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்தது மாவட்ட நிர்வாகம். டெண்டர் விடப்பட்டு, பணிகளும் தொடங்கின. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தற்காலிக குடிசை அமைத்து வாழ்ந்துவரும் இம்மக்கள், தற்போது கொரோனா ஊரடங்கால் உணவிற்கே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே கள நிலவரமாக உள்ளது.
#GameCorner
கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.