சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழையும் மற்றும் காற்றுடன் கூடிய மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது.

இந்த மாத இறுதியில் பலத்த மழை ...

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம்: முதல்வர்

இந்நிலையில், சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருமக்கோட்டை, உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.