தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்வது வழக்கம். அதன்படி வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம், வண்டுவாஞ்சேரி, அண்ணாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது தடுத்து நிறுத்தம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்டேட், வால்பாறை, நல்லகாத்து, கருமலை, பச்சமலை, முடிஷ், சோலையர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
‘தவமாய் தவமிருந்து’ இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி – இயக்குநர் சேரன் சூசகம்
பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும், தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்று வட்டாரங்களில் இடி , மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன்கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி, முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.